Thursday, July 8, 2010

கணினியில் அதிவேகமாக தட்டச்சு செய்ய எளிமையான வழி

கணினியில் வேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்றால் தட்டச்சு
வகுப்புக்கு சென்று படித்தால் தான் வரும் என்றெல்லாம் இல்லை
சிலவகை எளிய வழி முறைகள் மூலமும் நாமும் எளிதாக
வேகமாக தட்டச்சு செய்யலாம் எப்படி என்பதைப்பற்றித் தான்
இந்தப் பதிவு.

ஆன்லைன் மூலம் தட்டச்சு படிக்கலாம் என்று சொல்லி எத்தனையோ
இணையதளங்கள் வந்தாலும் சற்று வித்தியாசமாகவும் புதுமையாகவும்
வார்த்தை விளையாட்டு மூலமும் நாம் எளிதாக தட்டச்சு படிக்கலாம்.
கணினியில் வேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்ற எண்ணம்
உள்ள யாரும் இந்த தளத்தைப்பயன்படுத்தி வேகமாக தட்டச்சு
செய்யலாம் என்ற கொள்கையுடன் வலம் வருகிறது.


வெவ்வெறு வகையான பயிற்ச்சிகள் எந்த மொழியை வேண்டுமானலும்
எளிதாக தட்டச்சு செய்து பழகலாம் ( தமிழ் மொழி இல்லை).
வேடிக்கையும் வித்தியாசமாகவும் தட்டச்சு பழகலாம் குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் புரிந்து தட்டச்சு
செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தட்டச்சு பலைகையில்
விரல்களை எப்படி வைக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து
அத்தனையும் சிறப்பாக சொல்லிக்கொடுக்கின்றனர். சில நாட்கள்
முழுமையாக பயன்படுத்தினால் நாமும் தட்டச்சு செய்வதில்
வல்லவர்களாக மாறலாம்.
இணையதள முகவரி : http://www.sense-lang.org

புதுமையான முறையில் எளிதாக வெளிநாட்டு மொழி கற்க்கலாம்.

வெளிநாட்டு மொழி கற்க்க வேண்டும் என்றால் நமக்கு
நேரம் கிடைக்க வில்லை என்கிறோம் ஆனால் புதுமையாகவும்
எளிதாகவும் நமக்கு நேரம் கிடைக்கும் போதும் ஆன்லைன் மூலம்
நாம் வெளிநாட்டு மொழியை கற்க்கலாம் எப்படி என்பதைப்பற்றித்
தான் இந்த பதிவு.


தமிழ் மொழி போல் இனிமையான மொழி எங்கும் இல்லை என்பது
உண்மைதான் வேற்று நாட்டு மொழிகளை கற்க்கும் ஆர்வம்
உள்ள நண்பர்களுக்கு உதவுவதற்க்காக ஒரு தளம் உள்ளது.
இந்தத் தளத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் புதுமையான
முறையில் எளிதாக மொழியை கற்றுக்கொடுக்கின்றனர்.
ஒரு மொழியை பேசவும் எழுதவும் புதுமையான முறையில்
விளையாட்டாகவும் முழுமையாகவும் கற்றுக்கொடுக்கின்றனர்.


இணையதள முகவரி : http://lingt.com
இந்தத் தளத்திற்க்குச் சென்று நமக்கு என்று ஒரு கணக்கு
உருவாக்கிக் கொள்ள வேண்டும் . பின் எந்த மொழியை நாம்
கற்க்க வேண்டுமோ அந்த மொழியை எளிதாக கற்க்கலாம்.பேசவும்
எழுதவும் தனித்தனி பயிற்ச்சி அளிக்கின்றனர்.ஆரம்பத்திலிருந்து
மொழியை எப்படி கற்க்க வேண்டும் என்று நம் கையைப்பிடித்து
பயிற்ச்சி அளிக்கின்றனர். சைனிஸ் மொழியை மட்டும் இப்போது
முழுமையாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இதிலிருந்து நாம் எளிதாக
சைனிஸ் மொழியை பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ளலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த
தளம் பயனுள்ளதாக இருக்கும்

Wednesday, July 7, 2010

வாக்காளர் பட்டியல் விவரம்: எஸ்.எம்.எஸ்., மூலம் அறியலாம்

சென்னை:வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் முறையை, தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் முதல் முறையாக வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் முறையை, சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வசதியை சென்னையில் நேற்று நடந்த தேர்தல் கமிஷன் வைர விழாவின்போது,தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா துவக்கி வைத்தார்.

சென்னை மாவட்டத்தில், தற்போது, 27 லட்சத்து 20 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 97.83 சதவீத வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சென்னை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், எஸ்.எம்.எஸ்., வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, சென்னை மாவட்ட வாக்காளர்கள் மட்டுமே இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

வாக்காளர்கள் தங்களை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள மொபைல் போனில், 'vote' என டைப் செய்து ஒரு, 'space' விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, '51913' என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், வாக்காளரின் பெயர், அவர் வசிக்கும் தொகுதியின் பெயர், ஓட்டளிக்க வேண்டிய மையத்தின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் பதிலாக கிடைக்கும்.

Thursday, July 1, 2010

கவுன்சலிங் சிக்கல் தீர்ந்தது

ஏஐசிடிஇ புதிய விதிகள் இந்தாண்டு அமல் இல்லை

0diggsdigg Share 
Tamil news paper, Tamil daily news 
paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political 
news, business news, financial news, sports news, today news, India 
news, world news, daily news update சென்னை : பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) விதித்த நிபந்தனைகள் செல்லும். ஆனால், அந்த நிபந்தனைகளை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த முடியாது.’

Tuesday, June 29, 2010

தமிழகத்தின் சிறந்த கல்லூரிகள்

தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகள்
(தேசிய அளவிலான ரேங்க் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)


1.Indian Institute of Technology - IIT
மெட்ராஸ் (5)

2.College of Engineering, Anna University
சென்னை (10)

Monday, June 28, 2010

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

Saturday, June 26, 2010

உங்களிடம் 3Q இருக்கிறதா?


ரு நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் 'சேல்ஸ் ரெப்' வேலைக்கு இன்டர்வியூ நடந்தினார்கள். இறுதியில் இரண்டு பேர் மட்டும் மிஞ்சினார்கள். அதில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
சேல்ஸ் மேனேஜர் தன் கையில் இருந்த பேனாவை முதல் நபரிடம் கொடுத்து, "இதை என்னிடம் விற்றுக் காண்பியுங்கள்" என்றார். அவர்...

, "இந்த பேனா மிகவும் அழகாக எழுதும். இதன்
டிரான்ஸ்பரன்ட் டிசைன் மூலம் எப்போது 'இங்க்' தீரும் என்பதை அறிந்துகொள்ள முடியும். விலையும் குறைவு" என்று பட்டியலிட்டு மேனேஜரிடம் பேனாவை நீட்டினார். அந்த நபரின் மார்க்கெட்டிங் திறமையில் அசந்துவிட்டார் சேல்ஸ் மேனேஜர்.
மீண்டும் அதே பேனாவை அடுத்த நபரிடம் விற்றுக்காட்டச் சொன்னார் சேல்ஸ் மேனேஜர். அவர் பேனாவை வாங்கி, கீழே போட்டு உடைத்துவிட்டு, "இப்போது உங்களுக்கு புதியதாக பேனா வேண்டும். என்னிடம் ஒரு பேனா இருக்கிறது. வாங்கிக்கொள்கிறீர்களா?" என்றார்.
யாருக்கு அந்த வேலை கிடைத்திருக்கும்? நிச்சயமாக இரண்டாவது நபருக்குத்தான். முதல் நபர் தெரிந்த விஷயங்களை, அதிக நேரம் பேசி விற்பனை செய்தார். இரண்டாவது நபர் வாங்குவதற்கான தேவையை ஏற்படுத்தினார். சுருக்கமாகப் பேசினார். தேவையை ஏற்படுத்துவதும், நேரத்தைச் சேமிப்பதும்தான் பிசினஸில் முதல் இரண்டு தேவைகள்.
பிசினஸ் மேனேஜ்மென்ட்டில் சொல்லப்படுகிற இந்தக் கதை, சமயோசிதம், மற்றவர்களை நம் ஆளுகைக்குள் கொண்டுவருவது, நிதானம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கிறது. இந்த மூன்று விஷயங்களைத்தான் Intelligent Quotient(IQ), Emotional Quotient(EQ), Spiritual Quotient(SQ) ஆகிய மூன்று 'Q' என்கிறார்கள். தமிழில் அறிவு வளம், மன வளம் மற்றும் ஆன்ம வளம் என்று கூறலாம். நம் எல்லோருக்குமே குறிப்பிட்ட சில சதவிகிதங்களில் இவை இயற்கையாகவே அமைந்திருக்கும். இவற்றை மேம்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது வெற்றி. எப்படி மேம்படுத்துவது?
ஐன்ஸ்டீன் போல் யோசி!
"புத்திசாலித்தனம் என்பது தீர்வுகளைக் கண்டடைவதில் இல்லை. எவ்வளவு தூரம் நீங்கள் அந்தப் பிரச்னையைச் சமாளிக்கிறீர்கள் என்பதில் இருக்கிறது!" என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
ஒரு பிரச்னையைப் பெரும்பாலும் ஒரே கோணத்தில் பார்ப்பார்கள். அதை வேறு ஒரு பரிமாணத்தில், வேறு ஒரு கோணத்தில் நீங்கள் அணுகும்போது அதற்கான தீர்வு எளிமையாகக் கிடைத்துவிடும். அல்லது அந்தத் தீர்வுக்கான வழியாவது கிடைத்துவிடும்.
முதலில் பிரச்னையின் காரணம், அதன் பின்னணிபற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்னையின் விளைவுகள் எப்படி இருக்கும்? நல்லது என்றால், அதை எப்படிச் சாத்தியப்படுத்துவது? கெட்டது என்றால், அதை எப்படிச் சமாளிப்பது? இதை யோசித்தாலே பாதிப் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். நினைவில் இருக்கட்டும். எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு.
ஐ.க்யூ. என்பது அரித்மெட்டிக் அறிவு என்பது மட்டுமல்ல; பொது அறிவு, தற்கால நிகழ்வுகள், நினைவுத் திறன், மாத்தி யோசிப்பது போன்றவையும் அடங்கும். படித்தவர்களுக்கு மட்டுமே அதிக ஐ.க்யூ. இருக்கும் என்று சொல்வது தவறு. காடுகள், மலைகளில் வாழும் மனிதர்களுக்கு இயற்கையாகவே ஐ.க்யூ. அதிகமாக இருக்கிறது. அனுபவ அறிவை வைத்து அவர்கள் பிரச்னையைச் சுலபமாகச் சமாளித்துவிடுவார்கள்.
அறிவைப் பெறுவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பெற்ற அறிவைப் பயன்படுத்துவது!" என்கிறார் இந்தியக் கணிதத் துறை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் செயலர் மகாதேவன். 100 சதவிகிதம் உண்மை!
சாப்ளின் போல் மனம்கொள்!
'மழையில் நடந்து செல்வதையே நான் விரும்புகிறேன். அப்போதுதான் என் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது' என்பார் சார்லி சாப்ளின். புன்னகையின் மூலம் வலிகள் கடந்து செல்வதுதான் அவரது மாய வித்தை. துன்பங்களைக் கணக்கில்வைக்காமல், சிரிப்பைக் கண்களில்வைத்தவர் சாப்ளின். அதுதான் சாப்ளினின் வெற்றி ரகசியம்.
உங்களுக்குள் பிரச்னைகள் இருக்கலாம். உங்களுக்கும், உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் சச்சரவுகள் இருக்கலாம். பிரச்னைகளைத் தீவிரம் ஆக்காமல் தீர்க்க முயலுங்கள். உங்களை முழுவதுமாக விட்டுக்கொடுக்காமல், கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். எதிரிகளைக்கூட உங்கள் நண்பராக்கிக் கொள்வதுதான் 'ஆர்ட் ஆஃப் இன்ஃப்ளூயன்ஸ்!' 'எமோஷனல் கோஷன்ட் (மன வளம்) என்பது உங்களின் ஐ.க்யூ-வைக் காட்டிலும் முக்கியமானது. மூளை இல்லாமல் இருப்பதுகூடப் பிரச்னை இல்லை. இதயமே இல்லாமல் இருப்பது பெரும் குற்றம்.
உங்களின் உணர்வுகளையும், பிறரின் உணர்வுகளையும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தால், சூழ்நிலையை உங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ள முடியும்.
சுய விழிப்பு உணர்வு, சுயக் கட்டுப்பாடு, சமூக விழிப்பு உணர்வு, சமூக உறவு ஆகிய இந்த நான்கும் இ.க்யூ-வில் தவிர்க்க முடியாதது. ஒரு இக்கட்டான சூழலில் முடிவெடுக்கும்போது, அறிவுப்பூர்வமாகவும் சமயத்தில் உணர்வுப்பூர்வமாகவும் செயலாற்ற வேண்டும். காரணம், லாபங்களை எதிர்பார்க்கும் அதே சமயம், நாம் மனிதர்களை இழந்துவிடக் கூடாது" என்கிறார் மனோதத்துவ நிபுணர் சி.ஆர்.எஸ்.
உங்களுக்கென்று நண்பர்கள் பலர் இருக்கலாம். அவர்களில் உண்மையான நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, நட்பை இன்னும் பலப்படுத்துங்கள். நல்ல நண்பர்கள்தான் நல்ல சூழலை, நல்ல விஷயங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்!
புத்தன்போல் சலனமற்றுக் கிட!
சில இயந்திரங்களுக்கும், சில விலங்குகளுக்கும் இ.க்யூ உண்டு. அவற்றிடம் இருந்து உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவது எஸ்.க்யூ. எனப்படும் 'ஸ்பிரிச்சுவல் கோஷன்ட்' மட்டும்தான். அதாவது, ஆன்ம வளம்.
"மதம் என்பது வேறு. ஆன்மிகம் என்பது வேறு. 'நான் யார்?' 'என் வாழ்வுக்கு என்ன அர்த்தம்?' என்கிற கேள்விக்கு விடை தேடுவதுதான் ஆன்ம பலம். ஆசிரமங்களுக்குச் செல்வதன் மூலமும் கண்களை மூடி அமர்வதாலும் மட்டுமே ஆன்ம வளம் வளர்ந்துவிடும் என்று நினைத்தால் அது தவறு. அனுபவங்கள்தான் ஒருவருக்கு ஆன்ம வளத்தை அதிகரிக்கும்.
உங்கள் மனதில் லாப நோக்கம் இருக்கும்போது, உண்மையான தேடல் இருக்காது. 'நாம் சமூகத்துக்கு எவ்வாறு பயன்பட முடியும்?' என்று ஒருவர் நினைத்தாலே, அவரின் ஆன்ம வளம் வளர ஆரம்பிக்கிறது என்று அர்த்தம்.
ஆன்ம வளத்தை அதிகரித்துக்கொள்ள வெளியில் இருந்து எதுவும் தேவைப்படாது. உங்களுக்குள் உள்நோக்கிப் பயணப்படுவதுதான் சிறந்த வழி. தியானம், யோகா போன்றவை ஆன்ம வளத்தை வளர்க்க உதவி செய்யும்" என்கிறார் சுகி சிவம்.
'வாழும் இந்த நொடியில் முழு உயிர்ப்புடன் வாழ். நமது கடமை நல்லதை மட்டுமே செய்வதுதான்' என்றார் புத்தர். சலனமற்று வாழத் தெரிந்தால், சோதனைகள் சீண்டாது.
அறிவு, மனம், ஆன்மா ஆகியவற்றை நல்ல முறையில் வளர்த்து வெற்றிக்கு உழைக்கத் தயாராகுங்கள்... இப்போதே!

காதல் திருமணத்தை நிச்சயிப்பது எப்படி?

கி.கார்த்திகேயன்


மீண்டும் மீண்டும் அதே நபருடன் காதலில் விழுந்தால்தான், ஒரு திருமணம் வெற்றியடையும்!

ஆளுமைத் திறன் - Personality

'நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, உங்களிடத்தில் என்ன இருக்கிறதோ அவற்றைக்கொண்டு உங்களால் என்ன செய்ய முடியுமோ... அதைச் செய்யுங்கள்!' என்பார் ரூஸ்வெல்ட். ஆளுமைத் திறன் என்ற வார்த்தைக்கு இதுதான் மிகச் சுருக்கமான விளக்கம்!


கூச்சம் தவிர்ப்பது எப்படி? ஆளுமை வளர்க்க தோழமை டிப்ஸ்

'கூச்சம் தவிர்', 'சந்திப்பு தவறேல்' ஆத்தி சூடியை ரீ-மிக்ஸினால் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும். காரணம், இன்று இளைஞர்களை அதட்டி மிரட்டி உருட்டும் அசுரன்... கூச்சம்!
'கூச்ச சுபாவமே எனது கேடயம்!' என்றார் மகாத்மா காந்தி. அன்று அவருக்குக் கேடயமாக இருந்த விஷயம், இன்று இளைஞர்களுக்குத் தடையாக இருக்கிறது. கை குலுக்குவதில் இருந்து மைக் பிடிப்பது வரை,

CAT, GRE, GMAT, GATE நுழைவுத் தேர்வுகள்

முதுகலைப் பட்டம் படிக்கிறீர்கள். படிப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்ததும் முதல் மாதச் சம்பளம் எவ்வளவு எதிர்பார்ப்பீர்கள்? 5,000, 20,000 அல்லது 50,000 ரூபாய்கள். கொஞ்சம் மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்... ஐந்துலட்சம் ரூபாய் என்றால் ஓ.கே-வா?
நீங்கள் திறமையானவராக இருந்தால் அதற்கு மேலும் கொட்டிக் கொடுக்க பன்னாட்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

அத்துமீறும் ராகிங்... எதிர்கொளவது எப்படி?

பூங்கொத்தில் முள்!' - ராகிங் கொடுமையை இப்படி வர்ணிக்கலாமா? கல்லூரியின் முதல் தினம் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத ஒரு பசுமைக் கல்வெட்டுதான். ஆனால், ராகிங்கில் சிக்கிக் கொள்ளும் சிலருக்கு மட்டும் அந்த நாள் ஒரு கறுப்புத் தினமாவது பெரும் சோகம். நாவரசு, சரிகா ஷா என ராகிங் கொடுமை உயிரையே பறித்த சம்பவங்களையும் இந்த மாநிலம் பார்த்திருக்கிறது.

இன்ஜினீயரிங் கவுன்சிலிங் சில அவசியங்களும்... சில ரகசியங்களும்!

ன்ஜினீயரிங் கவுன்சிலிங்! லட்சக் கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவை நனவாக்கும் முதல் புள்ளி. தரமான கல்வி கற்பித்து, சிறந்த வேலைவாய்ப்பி னையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களில் சேர இன்ஜினீயரிங் கவுன்சிலிங்தான் ஒரே வாசல். நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், ப்ளஸ் டூ மதிப்பெண்கள் மட்டுமேதான் கவுன்சிலிங்கில் பரிசீலிக் கப்படும்.

Wednesday, June 23, 2010

பொறியியல் படிப்புக்கான தமிழ் வழி பாடத் திட்டம்


‘இந்த ஆண்டு முதல் சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு படிப்புகளை தமிழ் வழியில் படிக்கலாம்’ என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான தமிழ்வழி பாடத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் நேற்று (22/06/2010) வெளியிட்டார்

Saturday, June 19, 2010

கல்விக் கடன்

கல்விக் கடன் கோரி இரண்டு ஆண்டாகக் காத்திருக்கும் பொறியியல் மாணவருக்கு 1 மாதத்தில் கல்விக் கடன் வழங்குமாறு வங்கி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Apprenticeship Training

Register here

http://www.boatsr.tn.nic.in/

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் : அறிவியலாளர்கள் எச்சரிக்கை

கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.


மரண தண்டனை

அமெரிக்காவில் ஒரு கைதியை சுட்டு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர். அந்த நாட்டில் வழக்கமாக இப்படி செய்வதில்லை. தூக்கில் தொங்கவிடுவது, ஊசி மூலம் ரத்தக் குழாயில் விஷம் செலுத்துவது, நாற்காலியில் கட்டி மின்சாரம் பாய்ச்சுவது, அறைக்குள் பூட்டி விஷ வாயு செலுத்துவது போன்ற முறைகளை கையாள்வார்கள்.

Friday, June 18, 2010

மருத்துவ மேதை அலி இப்னு ஸீனா

மருத்துவ வரலாற்றில் அலி இப்னு ஸீனாவுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு. அவரது அல் கானூன் பீல் தீப் என்ற மருத்துவக் கலைக்களஞ்சியமானது,மருத்துவத்துறையின் வேத நூலாகக் கொள்ளப்படுவதாக ஒஸ்லெர் என்னும் மேற்கத்தியஅறிஞர் குறிப்பிடுகின்றார்.

பன்றிக் காய்ச்சல்: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு

பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்குஅரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நோய் கண்டவர்களை தனிமைப்படுத்தி, தனி அறையில்சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

Thursday, June 17, 2010

Details Of engineering Colleges

தமிழக பொறியியல் கல்லூரிகள் தகவல்கள்

District-wise list

 Course-wise

University-wise list

Alphabetical List

Thursday, June 10, 2010

தமிழகத்தில் 100 சமுதாய கல்லூரிகள்

8&ம் வகுப்பு முடிக்காதவரும் சேரலாம்

சென்னை, ஜூன் 10&

தமிழகத்தில் விரைவில் 100 சமுதாயக் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

Wednesday, June 9, 2010

கல்வி உரிமை சட்டம்

மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் (Right to Education Act - 2010), கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

8ம் வகுப்பு வரை எந்த மாணவனையும் பெயிலாக்க கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும். இதை மீறி எந்த விதிமுறைகளையும் எந்த அதிகாரியும், மாநில அரசும் வகுக்க கூடாது.

Tuesday, June 8, 2010

நீங்களும் கலெக்டர் ஆகலாம்






ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ். போன்ற அரசு உயர் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளை அறிந்து கொள்ளும் முன் ஒரு செய்தி.
இத்தேர்வு குறித்த சில அடிப்படையான விவரங்களைத் தெரிந்து கொள்வது முக்கியம். பல்வேறு வகையான பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுவர். நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களின் 12 மடங்கு எண்ணிக்கை அளவுக்கு முதன்மைத் தேர்வில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதிலிருந்து ஒரு காலியிடத்துக்கு 3 பேர் என்ற அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்குப் போட்டியாளரின் எண்ணிக்கை அமையும்.

நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?





> நீங்கள் வேலைக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவர் என்று இண்டர்வியூ செய்பவர்
தீர்மானிக்கும் விதத்தில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
> அந்த அலுவலகத்தைப் பற்றிய விவரங்கள், சேவைகள்,
தொழிலாளர்களின் திறமை, நிதி நிலைமை, உற்பத்திப் பொருள்கள், ஆண்டு வருமானம், லாப
நஷ்டங்கள், எதிர்கால விரிவுத் திட்டம், அவர்களுடைய போட்டியாளர்கள், அவர்களது
செயல்முறைகள் போன்ற விஷயங்களை பற்றி முடிந்த அளவு விவரங்களைச் சேகரித்துக்
கொள்ளவும்.



> நேர்முகத் தேர்வு நடக்க உள்ள இடம், நேரம் பற்றி

போபால் தரும் பாடம்!

படிப்பினை பெறுமா மத்திய அரசு?

போபால் விஷ வாயு வழக்கில் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட,அன்றைய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் செயல் தலைவர் கேசவ் மகிந்திரா உள்ளிட்ட 8 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ள நீதிமன்றம்,அவர்கள் பிணையில் செல்லவும் மேல்முறையீடு செய்யவும் அனுமதித்துள்ளது,அதே நாளில் சிலமணி நேரங்களில் அவர்கள் வீடு திரும்பினர்!

Monday, June 7, 2010

போபால் விஷவாயு வழக்கு

20 ஆயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷவாயு வழக்கு


8 அதிகாரிகள் குற்றவாளிகள்!







போபால், ஜூன் 7&

இருபதாயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு வழக்கில் 8 அதிகாரிகள் குற்றவாளிகள் என மாஜிஸ்திரேட் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. சம்பவம் நடந்து 26 ஆண்டுகளுக்கு பிறகு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


பேஸ் புக்கிற்கு இணையான மில்லத் பேஸ் புக்

மில்லத் பேஸ் புக்


பேஸ் புக் இணையத்தளம் மூலம் நபிகளாரை அவமதிக்கும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பேஸ் புக்கிற்கு மாற்றீடாக பாகிஸ்தான் இளைஞர்கள் `மில்லத் பேஸ் புக்' எனும் புதிய சமூக வலைப்பின்னல் இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.


உலகெங்கும் வாழும் சுமார் 1.6 பில்லியன் முஸ்லிம்களுக்குமான ஓர் உறவுப் பாலமாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கும் தளமாகவும்

NCHER மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி "கேம்பஸ் பிரான்ட் ஆப் இந்தியா" ஆர்ப்பாட்டம்





மத்திய அரசு அமல்படுத்த முனைந்துள்ள "உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய ஆணையம் - NCHER 2010" மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை ஆவடியில் "கேம்பஸ் பிரான்ட் ஆப் இந்தியா" ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மாநில செயலாளர் சகோதரர் S. முஹம்மது ஷாபி நிருபர்களுக்கு பேட்டியளிக்கிறார்

ஏந்தலின் வழிகாட்டுதலில்

ஏந்தலின் வழிகாட்டுதலில்
எழுச்சியை முன்னெடுத்த
ஏற்றமிகு தோழர்கள்
சீற்றமிகு உறுதியுடன்
சீரிய நடைதனிலே
சிங்கங்களாய் அணிவகுப்பில் !

அணிவகுப்பு - இது
அடக்குமுறைக்கெதிரான படையெடுப்பு
ஆதிக்கவெறிகளின் அழித்தொழிப்பு
சாதியத்தீயின் வேரறுப்பு
சமத்துவப்பூவின் நீர்தெளிப்பு
பாசிசக் கயமையின் களையெடுப்பு
பன்பொரும் பாரதத்தின் பாதுகாப்பு !



பிரிவினை ஏற்படுத்தி
அரியணை ஏறிவிட
ஆண்டாண்டு சதிசெய்திடினும்
காரிருள் படிந்திட்ட காவிக் கயவர்களின்
கனவெனினும் அது கரையேறாது !


சுடர்விடும் சுதந்திரமும்
நடுநிலை நீதியும்
பயம் போக்கும் பாதுகாப்பும்
விளைந்திட வீறுகொள்வாய்
வீழ்ச்சியின் வேதனையில்
எழுச்சியை வித்திட்டு
இன்புறும் வெற்றி காண்பாய்!!!!

- Shafi